(நியூயோர்க்) இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதஉரிமை ஆர்வலர்கள் நிய+யோர்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். ஏப்ரல் 11ஆம் திகதி மாலை 4.25 – 5.00 மணிக்கு இந்தப் போராட்டம் இடம்பெறும். ஆனைத்துலக மன்னிப்புச் சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள், பெரும்பாலானவர்கள் மாணவர்கள், 10 நாடுகளில் இருந்து வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கின்றனர். ஐ.நா. அலுவலகக் கட்டடத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட, ‘சுடர்ஒளி’ நாழிதளின் பத்திரிகையாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் கொலைக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிக்கும்படி இலங்கை அரசாங்கதிடம் இந்தப் போராட்டத்தின்போது கோரிக்கை முன்வைக்கப்படும். 2006ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் குறைந்தது 10 ஊடகப் பணியாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அடுத்தே இந்தப் போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் உள்ள தமிழ் மனிதஉரிமை ஆர்வலர்களும் இதில் பங்கெடுத்துக்கொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தலாம்.
Wednesday, April 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment